பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண் ஸ்வாமி காலமானார்

News Reader Saroj Narayana Swamy-அகில இந்திய வானொலியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண் ஸ்வாமி சென்னையில் காலமானார்.

Update: 2022-08-13 11:48 GMT

News Reader Saroj Narayana Swamy

News Reader Saroj Narayana Swamy-லட்சக்கணக்கான தமிழர்கள் தினமும் `செய்திகள் வாசிபது சரோஜ் நாராயணசுவாமி' என்று கேட்டு எழும் காலம் இருந்தது. அகில இந்திய வானொலி மூலம் அவர் அடைந்த பிரபலம், ஒலிபரப்புத் துறையில் அவர் செய்த ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக 2009 ஆம் ஆண்டில் சரோஜுக்கு தமிழக அரசு கலைமாமணி விருதை வழங்கியது.

அக்டோபர் 31, 1984 அன்று இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது அன்றைய இரவு செய்தியில் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இல்லை என்று அறிவிப்பதற்கு வருந்துகிறோம் என ஸ்கிரிப்டில் இருந்ததை அன்னை இந்திரா காந்தி என அவர் சேர்த்து படித்தது பலரின் பாராட்டை பெற்றது.

அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளரான சரோஜ், ஒளிபரப்புத் துறையில் பெண்களுக்கு முன்னோடியாக இருந்தார். புதுதில்லியில் 35 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, ஒளிபரப்புத் துறைக்கு பங்களித்து வந்தார்.

தமிழ் படங்கள், திரைப்படங்கள் பிரிவு ஆவணப்படங்கள் மற்றும் செய்தி இதழ்கள் ஆகியவற்றிற்கு குரல் கொடுப்பதைத் தவிர, தமிழ்த் திரைப்படங்களுக்கு சப்-டைட்டில் மற்றும் ஸ்பாட்டிங் (ஆங்கிலத்தில்) ஆகியவற்றில் அவரது பங்களிப்பு இருந்தது.

அந்த கணீர் குரலுக்கு சொந்தக்காரர் இன்று நம்மிடையே இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News