ஐரோப்பிய நாடுகளில் இருந்து மீன் இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தடை
நட்பற்ற நாடுகளில் இருந்து மீன், கடல் உணவுகளை இறக்குமதி செய்ய ரஷ்யா தடை விதித்து உள்ளது.
கடந்த உக்ரைன் மீது ரஷ்யா திடீரென படை எடுத்தது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி ரஷிய அதிபர் புதின் போர் நடவடிக்கைகளில் இருந்து பின் வாங்கவில்லை. இதன் காரணமாக ரஷ்யா மீது சில நாடுகள் பொருளாதார தடை விதித்தன.
உக்ரைன் விவகாரத்திற்காக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட மேற்கத்திய பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரஷியா தற்போது நட்பற்ற நாடுகளில் இருந்து மீன் இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்து உள்ளது.
இந்த அறிவிப்பின்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நார்வே மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய "நட்பற்ற நாடுகளில்" இருந்து பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் கடல் உணவுகள் போன்ற பொருட்களை ரஷ்யா இனி இறக்குமதி செய்யாது.
ரஷ்ய பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் செவ்வாயன்று இந்த நாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை அறிவித்தது. இந்த கட்டுப்பாடுகள் "உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சில சந்தை இடங்களை விடுவிக்கும், அதன் திறன் உள்நாட்டு சந்தையின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய அனுமதிக்கும் என கூறப்பட்டு உள்ளது.
ஒயின் மீதான சுங்க வரி உயர்வு
இது தவிர, "நட்பற்ற நாடுகளில்" இறக்குமதி செய்யப்படும் ஒயின் மீதான சுங்க வரி 12.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயரும் என்றும் ரஷ்யா அறிவித்து உள்ளது.
ரஷ்ய உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிப்பதால், இறக்குமதி செய்யப்பட்ட மதுவைத் தவிர்த்து, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒயின்களை நுகர்வோர் அதிகளவில் தேர்வு செய்கிறார்கள் என்று அரசாங்கம் கூறியது.
உள்நாட்டு உற்பத்தி மற்றும் நட்பு நாடுகளின் இறக்குமதிகள் உள்நாட்டு தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் என்றும் மேலும் கூறி உள்ளது. சிலியில் இருந்து மது இறக்குமதி கடந்த ஆண்டு மதிப்பு அடிப்படையில் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஆர்மீனியாவில் இருந்து 161 சதவீதம் அதிகரித்தது, தென்னாப்பிரிக்க ஒயின் இறக்குமதியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு வாய்ப்புகள் உள்ளன என்று அரசாங்கம் கூறியது.
உள்நாட்டு நிறுவனங்களின் போட்டித்தன்மையை அதிகரிக்க, சுத்திகரிக்கப்பட்ட கிளிசரின் போன்ற பொருட்களுக்கான இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒட்டு பலகைக்கு 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும்.
புதிய இறக்குமதி தடைகள்
ரஷ்யா, 2014 முதல், மீண்டும், மீண்டும் மீண்டும் சர்வதேச தயாரிப்புகளை நாட்டில் தடை செய்துள்ளது. 2014 ஆம் ஆண்டில், ரஷ்ய ஜனாதிபதி ஒரு வருடத்திற்கு குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் சில விவசாய பொருட்களின் மூலப்பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வதை தடை செய்யும் ஆணையில் கையெழுத்திட்டார்.
அதே தடை 2016 இல் நீட்டிக்கப்பட்டது மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலும் மாற்றப்பட்டது. இது மீண்டும் 2018 வரை ஜனாதிபதியின் ஆணையால் நீட்டிக்கப்பட்டது. இறக்குமதி கொள்கை விவகாரங்களில் இது கடந்த கால நிலைப்பாடு என்பது கூடுதல் தகவலாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu