/* */

விருதுநகர்: 61 வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்பட 92 பேருக்கு கொரோனோ

விருதுநகர் மாவட்டத்தில் 61 வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்ட 92 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

விருதுநகர்: 61 வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்பட 92 பேருக்கு கொரோனோ
X

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, நாளை நடைபெறவுள்ளது. இப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஊழியர்கள், அரசியல் கட்சிகளின் முகவர்கள், பத்திரிக்கையாளர்கள் என, மொத்த 2527 பேருக்கு கடந்த 29ம் தேதி கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையில், வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் 3 பேருக்கு, அரசு ஊழியர்கள் 22 பேருக்கும், பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த வாக்கு எண்ணிக்கை முகவர்கள் 61 பேர் என மொத்தம் 92 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில், அதிகபட்சமாக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் 61 பேருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, அவர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 May 2021 3:55 AM GMT

Related News