/* */

கொலை முயற்சி வழக்கு: நெல்லையில் பிரபல ரவுடி முருகன் கைது

கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பிரபல ரவுடி நெல்லையில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கொலை முயற்சி வழக்கு: நெல்லையில் பிரபல ரவுடி முருகன் கைது
X

பைல் படம்

நெல்லை ஏர்வாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தளபதி சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(50). இவருக்கு மேலூர் பெரிய குளத்தில் மீன்பிடிக்கும் குத்தகை கிடைக்கவில்லை.

இதற்கு காரணம் தளபதி சமுத்திரத்தை சேர்ந்த வேல்முருகன்(30) என நினைத்து 10.08.2021 அன்று ஏர்வாடி பெரிய கோவில் வாசல் முன்பு நின்று கொண்டிருந்த அவரை, முருகன் அவதூறாக பேசியுள்ளார். மேலும், அரிவாளால் தாக்கியதாகவும் அதில் விலகிவிட்டதால், கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

இதுகுறித்து வேல்முருகன் ஏர்வாடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் ஆதம் அலி, விசாரணை மேற்கொண்டு கொலை மிரட்டல் விடுத்த முருகனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

பிரபல ரவுடியான முருகன் மீது வள்ளியூர் காவல்நிலையத்தில் புகுந்து போலீஸ் பவுல் அருமை துரையை கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 Aug 2021 4:29 PM GMT

Related News