Begin typing your search above and press return to search.
மலைவாழ் மக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்
இந்த முகாமில் காணிக்குடியிருப்பு மலைவாழ் மக்கள் மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா கண் பார்வைக்கான சேவை அமைப்பு மற்றும் திருநெல்வேலி அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து குற்றாலம் ஐந்தருவியில் தனியார் தங்கும் விடுதியில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் காணிக்குடியிருப்பு மலைவாழ் மக்கள் மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு கண்களை பரிசோதித்து அதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் மற்றும் காணி இனமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.