மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி
என். சங்கரய்யா.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா உடல் நலக் குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான என். சங்கரய்யா உடல் நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சங்கரய்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தனது நூறாவது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பருவநிலை மற்றும் காரணமாக அவருக்கு சளி தொல்லை அதனால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சங்கரய்யாவின் குடும்பத்தினர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் உடன் இருந்து அவரை கவனித்து வருகிறார்கள்.
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் அளிப்பது தொடர்பான மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ரவி அனுமதி அளிக்கவில்லை என்ற ஒரு சர்ச்சை கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu