/* */

தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகி நினைவு நாள்: பாஜகவினர் மலரஞ்சலி

தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகி சிக்கல் கணேசபாண்டியன் நினைவு நாளில் பாஜகவினர் மரியாதை செலுத்தினர்

HIGHLIGHTS

தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகி நினைவு நாள்: பாஜகவினர்  மலரஞ்சலி
X

 சிக்கல் கணேச பாண்டியன் 21ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இராமநாதபுரம் மாவட்ட பாஜக சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கணேச பாண்டியன் 21ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இராமநாதபுரம் மாவட்ட பாஜக சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளரான சிக்கல் கணேச பாண்டியன். கடந்த 2001ல் படுகொலை செய்யப்பட்டார். இவரது 21ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இராமநாதபுரம் மாவட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் ரமேஷ்கண்ணன் தலைமையில், மாவட்டத்தலைவர் இஎம்டி. கதிரவன் முன்னிலையில் பாஜக வினர் சிக்கல் கணேசபாண்டியன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆத்மா கார்த்திக், தாய் லட்சுமி, பிரியா முருகானந்தம், இயற்கை மற்றும் கனிமவள மாவட்ட தலைவர் செந்தில்குமார், பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் காளி ராஜா, துணைத் தலைவர் ஸ்டாலின், மாவட்ட செயலாளர் உமா ரமணி, தரவு மேலாண் பிரிவு மாவட்ட தலைவர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் கலைவாணி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். கணேச பாண்டியன் நினைவிடத்தில் அரசியல் கட்சி சார்பில் பாஜக முதன்முதலில் அஞ்சலி செலுத்தியது தேவேந்திரகுல வேளாளர் மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 9 Aug 2022 7:45 PM GMT

Related News