பொது மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி வைத்த புதுக்கோட்டை எம்எல்ஏ

பொது மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி வைத்த புதுக்கோட்டை எம்எல்ஏ

புதுக்கோட்டை அருகே மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய மின் மாற்றி அமைத்துக் கொடுத்து  துவக்கி வைத்த புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா

மக்களின் கோரிக்கையை ஏற்று மின் அழுத்த பிரச்னையை தீர்க்க 63kva புதிய மின் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுத்தார்

மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி வைத்த புதுக்கோட்டை எம்எல்ஏ முத்து ராஜா.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் வைக்கும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார் புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவ முத்து ராஜா. புதுக்கோட்டை சட்டமன்ற அலுவலகத்தில் காலை மாலை என இருவேளைகளிலும் மக்களின் கோரிக்கையை கேட்டு வருகிறார். பொதுமக்கள் கோரும் கோரிக்கைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, புதுக்கோட்டை சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை ஒன்றியம், வடவாளம் ஊராட்சி , கண்டகாரப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டு வரும் குறைந்த மின் அழுத்த பிரச்சனையை போக்கி மக்களின் கோரிக்கையை ஏற்று மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்ட 63kva புதிய மின் மாற்றி யை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா இன்று மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்

நிகழ்வில், அரசு மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் , மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Tags

Next Story