/* */

சிப்காட் துணை மின்நிலைய விநியோகப் பகுதிகளில் ஜன 3 ல் மின் தடை

மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 3.1.2023 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்

HIGHLIGHTS

சிப்காட் துணை மின்நிலைய விநியோகப் பகுதிகளில் ஜன 3 ல் மின் தடை
X

பைல் படம்

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 3.1.2023 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால் , இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சிப்காட் நகர், தாவூது மில், சிட்கோ தொழில்பேட்டை( திருச்சி ரோடு), ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி, முத்துடையான் பட்டி, கிளியூர், மேலூர்.

அம்மன்பேட்டை, வாகைப்பட்டி, உடையாண்டிபட்டி, இரும்பாளி, சித்தன்னவாசல், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி. வேப்பங்குடி, பள்ளத்திவயல்.

பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர் சிட்கோ (தஞ்சை ரோடு) ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9. மணிமுதல், மாலை 4. மணிவரை மின்வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் / இயக்குதலும் காத்தலும் /கிராமியம்/ புதுக்கோட்டை ச. கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Jan 2023 5:00 AM GMT

Related News