/* */

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் நகை கொள்ளை
X

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கை.களத்தூர் காலனி தெருவில் வசிக்கும் நந்திஷ் குமார் என்பவர் கடந்த மார்ச்.20 ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தனது உறவினரது திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்ற நிலையில் அவர்கள் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்ற அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த சுமார் 35 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணம் திருட்டு போயுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கைகளத்தூர் போலீசார் கை ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று சம்பவ இடத்தை சோதனையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 March 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நேருவின் 60வது நினைவு தினம் : பிரதமர் மோடி அஞ்சலி..!
  2. உலகம்
    ராணுவ செயற்கைக்கோள் ஏவுவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள கிம் ஜாங்...
  3. இந்தியா
    ரயிலில் பெண் பயணிகளுக்கான சட்ட நெறிமுறைகள் என்ன தெரியுமா..?
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. உலகம்
    இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஆதரவாக...
  7. விளையாட்டு
    ஐபிஎல் 2024 பரிசுத் தொகை: கேகேஆர் ரூ. 20 கோடி, எஸ்ஆர்எச் ரூ 12.5
  8. சினிமா
    கூலி படத்தில் சத்யராஜ்? இப்படி ஒரு டிவிஸ்ட்டா?
  9. இந்தியா
    புனே போர்ஷே விபத்து: இளைஞனின் ரத்த மாதிரியில் முறைகேடு செய்ததாக 2...
  10. இந்தியா
    இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி கெஜ்ரிவால் மனு...