வருகிற 15ஆம் தேதிக்குள் கடைகளில் பெயர் பலகை தமிழில் அமைக்க வேண்டும்: வணிகர் சங்க தலைவர்

வருகிற 15ஆம் தேதிக்குள் கடைகளில் பெயர் பலகை தமிழில் அமைக்க வேண்டும்: வணிகர் சங்க தலைவர்
X

கடைகளில் பெயர் பலகைகளை தமிழில் வைப்பது சம்மந்தமாக, நாமக்கல் மாநகராட்சி ஆபீசில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் பேசினார்.

வருகிற மே 15ம் தேதிக்குள் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

நாமக்கல்,

வருகிற மே 15ம் தேதிக்குள் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

கடைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும், தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், நடைமுறை சிக்கல் மற்றும் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அவகாசம் வழங்கியிருந்தது. தற்போது வருகிற மே 15ம் தேதிக்குள் அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களது பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கலெக்டர் உமா அறிவுறுத்தலின்படி, மாவட்டம் முழுவதும் வணிகர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் சிவக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை துணை கமிஷனர் முத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், வருகிற மே 15ம் தேதிக்குள் அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களது பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தவறும்பட்சத்தில் வணிக நிறுவனங்களுக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும். நடைமுறை சிக்கல் மற்றும் வணிகர்களின் சிரமம் உணர்ந்து தமிழில் பெயர் பலகை அமைப்பதில் பல்வேறு தளர்வுகளை அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே வணிக நிறுவன உரிமையாளர்கள் தங்களது நிறுவன பெயர் பலகைகளை உடனடியாக தமிழில் அமைத்து தமிழுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் வணிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story