நாமக்கல்லில் உயர்ந்துவந்த முட்டை விலை 10 பைசா சரிவு : ஒரு முட்டை ரூ. 5.65

பைல் படம்
நாமக்கல்,
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
கடந்த மே. 1ம் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.50 ஆக இருந்தது. பின்னர் முட்டை விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. 20 நாட்களில் ஒரு முட்டைக்கு ரூ. 1.25 உயர்ந்து நேற்று ஒரு முட்டை விலை ரூ. 5.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தொடர் முட்டை விலை உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில், இன்று மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 630, பர்வாலா 481, பெங்களூர் 600, டெல்லி 501, ஹைதராபாத் 535, மும்பை 600, மைசூர் 613, விஜயவாடா 550, ஹொஸ்பேட் 550, கொல்கத்தா 575.
கோழிவிலை: பிராய்லர் கறிக்கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 110 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 97 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu