நாமக்கல்லில் வரும் 16ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

பைல் படம்
நாமக்கல்,
இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தனியார்துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் 3வது வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 16ம் தேதி நடைபெறவுள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை, அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.
இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேனேஜர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், அக்கவுண்டண்ட், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்ட் போன்ற பணிகளுக்கு தேர்வுசெய்யவுள்ளனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், பெறாதவர், 12ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ (அப்ரண்டீஸ்) பயிற்சி மற்றும் கம்ப்யூட்டரில் ஜாவா, டேலி முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலையளிப்போரும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற வெப்சைட்டில் பதிவு செய்திட வேண்டும். முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04286-222260 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் வருகின்ற 16ம் தேதி, காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்டவேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ள முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu