/* */

மதுரையின் முன்னாள் எம்.பி. காலமானார்

மதுரையின் முன்னாள் எம்.பி., ஏ.ஜி.எஸ். ராம்பாபு, உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார்.

HIGHLIGHTS

மதுரையின் முன்னாள் எம்.பி. காலமானார்
X

முன்னாள் எம்பி ஏஜிஎஸ் ராம்பாபு

காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரையில் 1989 - 91 மற்றும் 1991 - 96 வரை எம்.பி.,யாக இருந்தவர் ராம்பாபு. தமிழ் மாநில காங்., சார்பில் போட்டியிட்டு 1996ல் மூன்றாவது முறையாக எம்.பி.,யாக வெற்றி பெற்றார். ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளரான இவர் கட்சியின் மாநில பொதுச் செயலராகவும் இருந்தார்.

உடல் நலமின்றி இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

ராம்பாபுவின் தந்தை ஏ.ஜி.சுப்பராமனும் மதுரை எம்.பி.,யாக இருந்தவர். ராம்பாபுவும், அவரது தந்தை சுப்புராமனும் தொடர்ச்சியாக 5 முறை மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளனர்.

Updated On: 12 Jan 2022 12:54 AM GMT

Related News