/* */

நாகராஜா கோவில் தைபூசவிழா கொடியேற்றம்

நாகராஜா கோவில் தைபூசவிழா கொடியேற்றம்
X

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலுக்கு அப்பெயர் வர காரணமாக அமைந்ததோடு உலகில் நாகராஜருக்கு என தனி மூலஸ்தானம் கொண்ட சிறப்பு வாய்ந்த கோவிலாகவும் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகவும் உள்ளது அருள்மிகு நாகராஜா கோவில்.

பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தை பெரும் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது, முன்னதாக கோவில் மூலஸ்தானத்தில் உள்ள நாகராஜருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பஞ்சவாத்தியம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது,

பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி வீதி உலா, வாகன பவனி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும் தொடர்ந்து விழாவின் 9 ஆம் நாளான தை பூசம் அன்று சிறப்பு பெற்ற தேரோட்டம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் குமரி மாவட்டம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஏராளமானபக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 20 Jan 2021 5:30 PM GMT

Related News