/* */

கொரோனா விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட கிராமிய கலைஞர்கள்

குமரியில் இருந்து சென்னைக்கு கிராமிய கலைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

கொரோனா விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட கிராமிய கலைஞர்கள்
X

குமரியில் கிராமிய கலைஞர்களின் கொரோனா விழிப்புணர்வு பயணத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கொரோனா மூன்றாவது அலை அடுத்த மாதம் அதிகரிக்கும் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இதனிடையே மாநில அளவில் பொதுமக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், முக கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கிராமிய கலைஞர்கள் விழிப்புணர்வு இருசக்கர வாகன பயணம் மேற்கொண்டனர்.

30 நாட்கள் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று தொடங்கிய விழிப்புணர்வு இருசக்கர வாகன பிரசார பயணத்தை நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.

முன்னதாக மேஜிக் ஷோ மற்றும் கிராமிய பாடல்களுடன் தொடங்கிய இந்த பயணமானது திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்னை சென்று அங்கிருந்து பாண்டிச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, வழியாக அடுத்த மாதம் 17ம் தேதி மீண்டும் கன்னியாகுமரி வந்தடைகிறது.

Updated On: 15 Sep 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!