/* */

தீபாவளி பண்டிகையையொட்டி தருமபுரி மாவட்டத்தில் ரூ.4 கோடிக்கு மது விற்பனை

சாதாரண நாட்களில் மட்டும் ரூ.2முதல் 2.50 கோடி வரை மது விற்பனை நடைபெறும். ஆனால் பண்டிகை காலங்களில் அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

தீபாவளி பண்டிகையையொட்டி தருமபுரி மாவட்டத்தில் ரூ.4 கோடிக்கு  மது விற்பனை
X

பைல்படம்

தீபாவளி பண்டிகையையொட்டி தருமபுரி மாவட்டத்தில் ரூ.4 கோடிக்கு டாஸ்மாக் நிறுவனம் மூலம் மது விற்பனை நடந்துள்ளது

தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் முதல் முதியவர் கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து மகிழ்ந்தனர்.பொதுவாக பண்டிகை என்றாலே மதுப்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மது வகைகளை வாங்கி குடித்து மகிழ்வார்கள்.இதனால் பண்டிகைக்கு முதல் நாள் இரவு மது விற்பனை அமோகமாக நடைபெறும். தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 68 மது கடைகள் பார் வசதியுடன் உள்ளன. இந்த மதுக்கடைகளில் சாதாரண நாட்களில் மட்டும் ரூ.2முதல் 2.50 கோடி வரை மது விற்பனை நடைபெறும். ஆனால் அதேநேரம் பண்டிகை காலங்களில் கூடுதலாக மது விற்பனை நடைபெறும்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் வழக்கம்போல் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. நேற்று காலை முதல் மாலை வரை விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.காலை முதல் இரவு வரை விற்பனை களைகட்டியது. மதுப்பிரியர்கள் பிராந்தி, பீர், ஒயின் வகைகளை வாங்கிச் சென்றனர்.தீபாவளியையொட்டி நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ரூ.4 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக மாவட்ட டாஸ்மாக் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Updated On: 6 Nov 2021 6:00 AM GMT

Related News