கோவை- மயிலாடுதுறை ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை 2 நாட்கள் ரத்து
திருச்சி வழியாக செல்லும் கோவை மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயில் சேவை இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி ரயில் நிலையத்தில் தண்டவாளம், நடைமேடைகள் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் காரணமாக திருச்சி வழியாக செல்லும் பல ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. சில ரயில்கள் வந்து செல்லும் நேரங்களில் மாறுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதன் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பொறியியல் பணிகளுக்கு வசதியாக, கோவை – மயிலாடுதுறை- கோவை ஜன் சதாப்தி விரைவு ரயில்கள் 2 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பினை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
ரயில் எண்.12084 கோயம்புத்தூர் ஜங்ஷன்-மயிலாடுதுறை ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 30 & 31 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண்.12083 மயிலாடுதுறை – கோயம்புத்தூர் ஜங்ஷன் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலும்ஜூலை 30 & 31, 2023 ஆகிய இரு நாட்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu