/* */

கூடுவாஞ்சேரியில் நாளை 10 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்குட்பட்ட 10 இடங்களில், நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கூடுவாஞ்சேரியில் நாளை 10 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில மாதங்காளாக கொரோனா தொற்று சற்று குறைந்து வந்தது. இதன் காரணமாக தளர்வுகள் அளிக்கப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்தில் பல பகுதிகளில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து காணப்படுகிறது.

மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை குறைக்கும் வகையில், நாளை ஒருநாள் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நகராட்சி, பேரூராட்சி, மற்றும் அனைத்து ஊராட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 10 இடங்களில், நாளை ஞாயிற்றுக்கிழமை, கொரொனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாம் நடைபெறும் இடங்கள்:

அதன்படி, நாளை நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்குட்பட்ட, நந்திவரம் நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சமுதாயக்கூடம், செயிண்ட் மேரீஸ் பள்ளி, ஏ.சி.எஸ் திருமண மண்டபம், கூடுவாஞ்சேரி பாரதியார் தெருவில் உள்ள கிருஷ்ணா மஹால் ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

அதேபோல், ஜி.எஸ்.டி சாலை ஆழ்வார் திருமண மண்டபம், பாரதியார் மெட்ரிக் பள்ளி, என்.பி.ஆர் மண்டபம், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம், திரௌபதியம்மன் கோயில் திடல், ஊராட்சி ஒன்றிய பள்ளி, பாலாஜி அவின்யூ காந்தி சிறுவர் பூங்கா ஆகிய 10 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியரகம், மற்றும் பேரூராட்சி நிர்வாகம், சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 11 Sep 2021 4:30 AM GMT

Related News