Begin typing your search above and press return to search.
மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கை மாநாடு பொதுக்கூட்டம்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வலியுறுத்தி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் திருமானூரில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் கோரிக்கை மாநாடு நிதியளிப்பு பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சி எஸ்.பி.சாமிதுரை தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.டில்லிபாபு உரையாற்றினார்.
கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயலாளர் எம். இளங்கோவன், மாவட்ட செயற்குழு ஆர்.மணிவேல், கே.கிருஷ்ணன், மாவட்ட குழு ஏசுதாஸ், சுப்பு கார்த்திக் ஒன்றியகுழு ஏ.கணேசன், ஆரோக்கியநாதன், லட்சுமணன், கலைமணி, கிளை பொறுப்பாளர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.