/* */

அரியலூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு

அரியலூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
X

அரியலூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் மாலை அணிவித்தார்.



எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு இன்று அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும் முன்னாள் அரசு தலைமைக்கொறடாவுமான தாமரை.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்நிகழ்வில், நகரச் செயலர் ஏ.பி.செந்தில், மாவட்ட மாணவரணிச் செயலர் ஓ.பி.சங்கர், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் அதன் பொறுப்பாளர் கலைவாணன் தலைமையிலான நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஜெயங்கொண்டத்திலுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதேபோல் செந்துறை, பொன்பரப்பி, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.தி.மு.க, அ.ம.மு.க, எம்.ஜி.ஆர் கழகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

Updated On: 17 Jan 2022 9:54 AM GMT

Related News