அரியலூர்- மணல் கடத்தல் லாரியை போலீசார் 7 கி.மீ. தூரம் விரட்டி பிடித்தனர்
அரியலூர் மாவட்டத்தில் மணல் கடத்தல் லாரியை போலீசார் 7.கி.மீ. தூரத்திற் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் அருகேயுள்ள ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கீழப்பழூவூர் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு தலைமையிலான போலீசார் அவர்களை மடக்கி பிடிக்க முயற்சித்தனர்.
ஆனால் மணல் கடத்தி வந்த லாரி மாற்று பாதையில் சென்றுள்ளது. மேலும் லாரியின் முன்பு அதிவேகத்தில் காரும் சென்றுள்ளது. அதனை ஏழு கி.மீ,.தூரம் விரட்டி சென்று மேலப்பழூர் கிராமத்தில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும் போது போலீசார் லாவகமாக மடக்கி பிடித்தனர்.
அப்போது லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் முன்னால் சென்ற காரில் மாற்று திறனாளியை அமர வைத்து கொண்டு நடுவழியில் போலீசார் மறித்தால் உடல்நிலை சரியில்லாதவரை அழைத்து செல்கிறோம் என கூறி, பின்னால் வந்த லாரியை மடக்கி பிடிக்காத அளவுக்கு போலீசாரை திசை திருப்பி விடலாம் என திட்டம் போட்டது தெரியவந்தது.
இதனையடுத்து லாரி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் ரமேஷ், ராஜேஷ், மருதமுத்து, ராமதாஸ், கார்த்திகேயன், ராஜ்குமார் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல் திருடர்களை விரட்டி பிடித்த கீழப்பழூவூர் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.