இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் விடுதலை

இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் விடுதலை

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகம் (கோப்பு படம்)

இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம், ஜெகதாப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் மீனவர்கள் இலங்கை கடற்படையினால் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாவதும் சிறைபிடிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்வது அவர்களது படகுகளை பரிந்துரை செய்வது என்பது போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இது தவிர கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி அவர்களது அவர்கள் பிடித்துள்ள மீன்களையும் பணம் மற்றும் படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்று விடுகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த மாதம் 16 மற்றும் 28ஆம் தேதிகளில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேர் இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் அப்போது இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்துஇலங்கைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோரிக்கை கொடுத்து இருந்தார். மத்திய அரசு சார்பிலும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 22 பேரும் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களில் 21 பேரை விடுதலை செய்து தாயகம் திரும்ப படி யாழ்ப்பாணம் நீதிமன்ற உத்தரவிட்டது. முருகன் என்ற ஒரு மீனவர் மட்டும் சிறை தண்டனை நடை விதிக்கப்பட்டதால் தொடர்ந்து சிறையில் உள்ளார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story