வந்தவாசி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் நெகிழி பைகள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள கடைகளில் நடந்த சோதனையில் ஒரு டன் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வந்தவாசி காந்தி சாலையில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன், சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் அலுவலர்கள் காந்தி சாலையில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது பல கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இருந்தது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு கடையின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.