வந்தவாசி நகராட்சியில் தாயை எதிர்த்து போட்டியிட்ட மகள் வெற்றி

வந்தவாசி நகராட்சி 18வது வார்டில் தாயும் மகளும் எதிர் எதிராக போட்டியிட்ட நிலையில் மகள் வெற்றி பெற்றார்.

Update: 2022-02-23 01:30 GMT

பிரியா தினகரன்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சி 18வது வார்டில் தாயும் மகளும் எதிர் எதிராக போட்டியிட்ட நிலையில்,  மகள் வெற்றி பெற்றார். 18வது வார்டில் திமுக சார்பில் கோடிஸ்வரி நித்யானந்தம், அதிமுக சார்பில் அவரது மகள் பிரியா தினகரனும் போட்டியிட்டனர்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட பிரியா தினகரன்,  தனது தாயான திமுக வேட்பாளர் கோடிஸ்வரியை விட 506 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

Tags:    

Similar News