திருவண்ணாமலையில் வரும் 27ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 27 ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2022-05-24 01:25 GMT

திருவண்ணாமலையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 27 ம் தேதி நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மையம் ஆகியவை இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது.

இதில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரேஷன் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News