திருவண்ணாமலை ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு வாக்குச் சாவடிகள் அமைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு 77 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன

Update: 2021-10-07 07:12 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 11 ஊராட்சி மன்றத் தலைவர்  மற்றும் 52 ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 9-ஆம் தேதி 34 பதவி இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  அதையொட்டி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று மாலை தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.  மேலும் இந்த தேர்தலை முன்னிட்டு மொத்தம் 76 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா 4 பேர் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு ஏற்கனவே சம்பந்தப்பட்ட பிடிஓ அலுவலகத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது 

Tags:    

Similar News