குடியரசு தின விழாவையொட்டி திருவண்ணாமலையில் போலீசார் பலத்த பாதுகாப்பு

குடியரசு தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-01-26 01:31 GMT

ரோந்து பணியில் போலீசார்.

குடியரசு தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. திருவண்ணாமலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் முருகேஷ் கொடியேற்றுகிறார். கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா நடக்கிறது.

இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள், அருணாசலேஸ்வரர் கோவில் பகுதிகள், அண்ணாமலையார் கோயில் மாடவீதி , கிரிவலப் பாதை மற்றும் கிரிவலப் பாதைகளில் அமைந்துள்ள ஆசிரமங்கள் அங்கு தங்குபவர்களின் விபரம், வெளிநாட்டவர்களின் வருகை என போலீசார் நேற்று இரவு திருவண்ணாமலை நகர் முழுவதும் பலத்த சோதனையில் ஈடுபட்டனர் .

இந்த நிலையில் நேற்று இரவு திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் போலீசார் மோப்பநாய் மூலம் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். பஸ்களில் ஏறியும் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News