திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷ விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷ விழா விமரிசையாக நடைபெற்றது.

Update: 2022-03-29 14:23 GMT

பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம், வில்வம் சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷ விழா  இன்று சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு ஸ்ரீ நந்தீகேஸ்வரர் மற்றும் ஸ்ரீ சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வில்வம் சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதை தொடர்ந்து, ஐந்தாம் பிராகரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து  சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News