இல்லந் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப் பிரச்சாரம் நிகழ்ச்சி!

திருவண்ணாமலையில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப் பிரச்சாரம் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-02-27 02:54 GMT

வியாபாரிகளிடம் திமுக அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கிய மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் கம்பன்

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப் பிரச்சாரம் நிகழ்ச்சி நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ. வ. வே.கம்பன், தேர்தல் பொறுப்பாளர் மருத்துவர் மாலதி நாராயணன் ஆகியோர் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்தனர்.

மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளை தமிழ்நாட்டில் ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்னும் திண்ணைப் பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும் என்ற கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்களின் ஆணையினை ஏற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு அவர்களின் வழிகாட்டுதலின்படியும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் இந்த பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை தேரடி வீதி, காய்கறி மார்க்கெட், மத்திய பேருந்து நிலையம் அருகே, வேங்கி கால் பகுதி, ஜெய் பீம் நகர் தெரு, ஆகிய பகுதிகளில் உள்ள காய்கறி வியாபாரம் செய்யும் மகளிர், மற்றும் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தமிழக அரசு வழங்கியுள்ள நல திட்டங்கள் குறித்தும் பிரச்சாரம் செய்தனர்.

மேலும் திருவண்ணாமலை நகரில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் திண்ணைப் பிரச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜய ரங்கன், மாவட்ட அணி அமைப்பாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், , ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்தனர்.

Tags:    

Similar News