தமிழக அரசின் மாஸ் கிளீனிங் திட்டம்: அமைச்சர் துவக்கி வைப்பு

தமிழக அரசின் மாஸ் கிளீனிங் திட்டத்தை அமைச்சர் வேலு திருவண்ணாமலையில் தொடங்கி வைத்து பல்வேறு பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டார்

Update: 2021-09-23 06:59 GMT

திருவண்ணாமலையில் சாக்கடை தூர்வாரும் பணி நடைபெற்றது

திருவண்ணாமலை தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர், அமைச்சர் எ வ.வேலு அவர்கள் தமிழக அரசின் மாஸ் கிளினிங் திட்டத்தின் கீழ் தூய்மை அருணை சார்பில் இன்று திருவண்ணாமலை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் தூய்மை காவலர்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டார்.

இப்பணியின் போது மாவட்ட ஆட்சியர், செங்கம் சட்டமன்ற உறுப்பினர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர், மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் , முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நேரு, நகராட்சி ஆணையர், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News