கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்..!

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம், மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Update: 2024-02-15 01:43 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -கோப்பு படம் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

அரசு அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் மாணவ மாணவியருக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனை இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை பாலிடெக்னிக் தொழில் படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் நடப்பாண்டில் புதிய மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதளத்தில்  Student login சென்று ஆதார் எண் அளித்து e-KYC verification செய்ய வேண்டும்.

கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship portal ) பதிவிற்கு 1.2.2024 முதல் செயல்பட துவங்கும் பதிவிற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் 29ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகலாம் என திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சித் தலைவர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News