திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகின்ற 25ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Update: 2021-09-19 15:14 GMT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகின்ற 25ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் உள்ள தொழில் நெறி வழிகாட்டு மையம் வளாகத்தில் காலை 10 மணிக்கு முகாம் நடக்கும். முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனத்தில் பணிபுரிய தகுதியுள்ள நபர்களை நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் நபர்களுக்கு அரசு பணியில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை ரத்து செய்யப்படாது. அவர்களது பதிவு மூப்பின் அடிப்படையில் அரசு பணிகளுக்கு பரிந்துரை செய்யப் படுவார்கள். இம்முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு ஐடிஐ பாலிடெக்னிக் கல்வி தகுதி உடையவர்கள் பங்கு பெறலாம்.

மேலும் பங்கேற்க விரும்புபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News