வீர தீர செயல்களுக்கான ஜீவன் ரக்சா விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
வீர தீர செயல்களுக்கான ஜீவன் ரக்சா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசு சாா்பில் வழங்கப்படும் வீர, தீர செயல்களுக்கான விருதுகளைப் பெறத் தகுதியானோா் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்க்காணும் பிரிவுகளில் ஜீவா ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கி வருகிறது. சர்வோத்தம் ஜீவன் ரக்சா பதக்கம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.
உத்தம் ஜீவன் ரக்சா பதக்கம்:
துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. தனக்கு காயம் ஏற்படினும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும். அதன்படி 2024-ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்சா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www sdat. tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2024ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பம் எனக் குறி ப் பி ட் டு விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம் பின்புறம், வேங்கிக்கால், திருவ ண்ணாமலை மாவட்டம் 606604 என்ற முகவரிக்கு 30.06.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்புதல் வேண்டும்
மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.