மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை - புனித நீர் தெளிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை நடத்தப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது

Update: 2021-12-09 13:36 GMT

திருவண்ணாமலை மலைஉச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதம்

மலையே சிவனாக வணங்கப்படும் திருவண்ணாமலையில் பக்தர்கள் பாதம் பட்டதால் பிராயசித்த பூஜை நடத்தப்படும். அப்போது மலையில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கும் அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இன்று திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்  தீபத்திருவிழா 24.11.2021 முடிவடைந்த நிலையில் மலை மீது தெளிக்க பிராயசித்த புனித நீர் சிறப்பு பூஜைக்கு பின் மலை மீது கொண்டு செல்லப்பட்டு,   அங்கு உள்ள  அண்ணாமலையார் பாதத்திற்கு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. 

இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர், சிவாச்சாரியார்கள்,  பிச்சகர்கள்  ரகுராமன்,  விஜயகுமார் , திருக்கோயில் மணியம் செந்தில் மற்றும் திருக்கோயில் ஊழியர்கள்  செய்து இருந்தனர் 

Tags:    

Similar News