திருவண்ணாமலையில் விளையாட்டு விடுதியில் கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலையில் உள்ள விளையாட்டு விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு சொந்தமான பள்ளி மாணவியர் விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியை, பொதுப்பணித்துறை மூலம் ரூபாய் 39.90 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இப்பணியை, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விடுதி சுவர்களுக்கு புதிதாக பெயின்ட் அடித்தல், கதவுகள், ஜன்னல்கள் பழுது பார்த்தல், கழிப்பறையை புதுப்பித்து சுகாதார வசதி, தண்ணீர் வசதி களை தரமாக விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் பிரதாப் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.