ஆரணி பட்டு நெசவாளர்களுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
ஆரணி பட்டு நெசவாளர்களின் பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் வகையில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பட்டு நெசவாளர்களின் பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் வகையில் சிறப்பு அஞ்சல் உறை விற்பனையை இன்று ஆரணி தலைமை அஞ்சலகத்தில் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அஞ்சல் துறை அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்