'கியூசெட்' பொது நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

மத்திய பல்கலைகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

Update: 2021-08-31 06:42 GMT

மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் 12 மத்திய பல்கலைகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் சேர்வதற்கு, மத்திய அரசின் சார்பில், 'கியூசெட்' என்ற பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, செப்., 15, 16, 23 மற்றும் 24ம் தேதிகளில் கியூசெட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆக. 16ல் துவங்கியது, நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்.

விண்ணப்பம் பதிவு செய்த மாணவர்கள், கட்டணத்தை வரும் 2ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, கணினி முறையில் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் வழிமுறைகளை, cucet.nta.nic.in என்ற இணையதளத்தில் இது குறித்த முழு தகவல்களையும் பார்க்கலாம்.

Tags:    

Similar News