திமுகவிற்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர் - கே.என் நேரு

Update: 2021-01-05 09:30 GMT

தமிழக மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டனர் என கே.என்.நேரு கூறினார்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் திமுகவின் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, அமைச்சர்கள் மீது ஆதாரப்பூர்வமாக ஊழல் புகாரை நாங்கள் தெரிவித்தால், புகாருக்கு விளக்கம் தராமல் எங்கள் தலைவர் மீது தனிநபர் விமர்சனம் செய்கிறார்கள்.தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்பரிசாக ரூ 2,500 வழங்குகிறது.சர்க்கரை கார்டை அரிசி கார்டாக மாற்றி,பணத்தை அதிமுகவினரே எடுத்துக் கொள்கின்றனர்.

மேற்கு வங்கத்தையும் தமிழ்நாட்டையும் பாஜக குறி வைத்துள்ளது. எப்படி இருந்தாலும் திமுக தான் ஆட்சியைப் பிடிக்கும். மூன்றாவது அணி அமைந்தாலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தாலும் திமுகதான் ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் அவர்களின் திட்டம் எடுபடாது,மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News