திருவாரூர் அருகே த.மு.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்

திருவாரூர் அருகே அடியக்க மங்கலத்தில் நெடுஞ் சாலையை சரிசெய்ய கோரி த.மு.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Update: 2021-10-31 05:46 GMT

திருவாரூர் அருகே சாலை மறியல் செய்த த.மு.மு.க.வினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திருவாரூர் நாகை தேசிய நெடுஞ்சாலையில் அடியக்கமங்கலம் பகுதியில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் மேல் பகுதியில் போதிய ஜல்லி மற்றும் தார் இடப்படாததால் முழுமையாக சேதம் அடைந்து பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக பல விபத்துகள் நடைபெற்று வருகிறது. இந்த பள்ளத்தை சரி செய்ய கோரி பலமுறை நெடுஞ்சாலை துறையிடம் வலியுறுத்தியும் இதுவரை சரி செய்யப்படவில்லை.

எனவே  திருவாரூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் த.மு.மு.க.வினர் ஈடுபட்டனர். அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி சாலையை சரி செய்வதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகன போக்குவரத்து தடைப்பட்டது.

Tags:    

Similar News