திருவாரூர்- கந்துவட்டி கொடுமையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருவாரூரில் கந்து வட்டி கொடுமையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-09-12 08:32 GMT

சதீஷ்குமார்



திருவாரூர் அருகே மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (29) இவர் திருவாரூர் அழகிரி காலனியை சேர்ந்த உமா என்பவரை திருமணம் செய்து 10 மாத பெண் குழந்தை உள்ளது. சதீஷ்குமார் பழைய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை மற்றும் அடகு வைத்தல் தொடர்பான தொழில் செய்து வருகிறார்.இவர் திருவாரூரை சேர்ந்த ஒருவரிடம் ஒரு லட்ச ரூபாய்க்கு கார் அடமானம் வைத்து வட்டி கட்டி வந்த நிலையில் 4 மாதமாக வட்டி பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  பணம் கொடுத்தவர்கள்  சதீஸ்குமாரை தகாத வார்த்தைகளால்  திட்டி அடித்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவரது புகைப்படத்தை திருடன் வர்ணித்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர் இதுகுறித்து திருவாரூர் நகர காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லையாம்.இதனால் மனம் உடைந்த சதீஷ்குமார்  கடிதம் எழுதிவைத்து விட்டு இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து திருவாரூர் போலீசார் சதீஷ்குமார்  உடலை மீட்க முயற்சித்த போது இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை உடலை தரமுடியாது என உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து உடலை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News