கொலை வழக்கில் தந்தை, மகன்கள் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருவாரூர் அருகே சகோதரர்களை கொலை செய்த வழக்கில் தந்தை மகன்கள் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

Update: 2022-04-23 13:14 GMT

திருவாரூர் அருகே சகோதரர்களை கொலை செய்த வழக்கில் தந்தை மகன்கள் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் ஒரே காலனியில் வசித்து வந்த ராஜா என்கிற ஸ்ரீதர் ராஜா மற்றும் அவரது சகோதரர் மதன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனம் சேதப்படுத்தியதாக ஏற்பட்ட மோதலில் அதே காலனியில் வசித்து வந்த உறாஜி முகமது, ருக்குன்பாட்ஷா, மன்சூர் அலிகான் முகமது ரியாஸ் மற்றும் இளம் சிறார் ஒருவரும் சேர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜா என்கிற ஸ்ரீதர்ராஜாவையும் சகோதரர் மதன் ஆகியோரை படுகொலை செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிபதி சாந்தி தலைமையில் விசாரணை நடைபெற்றது .குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து தந்தை மகன்கள் ஆகிய மூன்று நபர்களுக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை 6 ஆயிரம் அபராதம் மற்றும் மன்சூர் அலிகான் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து அவர்களை திருச்சி மத்திய சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News