திருவாரூர் அருகே காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்ற பெண்ணால் பரபரப்பு

திருவாரூர் அருகே காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2021-09-08 11:00 GMT

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நல்லிச்சேரியை  சேர்ந்தவர் முருகையன் இவரது மகள் செல்வி(32).இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

அப்போது  செந்தில் முருகன் (31)என்பவருடன் செல்விக்கு  பழக்கம் ஏற்பட்டது.  திருவாரூர் மாவட்டம் செம்மங்குடியை சேர்ந்த செந்தில்குமார்  செல்வியை திருணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். பின்னர் அவர் வெளிநாடு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம்  மணக்கால் அய்யம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் செந்தில்முருகனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும்  இன்று காலை திருமணம் நடைபெற்றது

இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் அந்த  மண்டபத்துக்குள் செல்வி நுழைய முயன்றார். அப்போது போலீசார் செல்வியை தடுத்து நிறுத்தினர்.திருமண விழாவில் பங்கேற்ற உறவினர்களுக்கும் செல்விக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து போலீசார் செல்வியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. .

Tags:    

Similar News