சேதமடைந்த திருவாரூர் புதிய பேருந்து நிலைய சாலையை சீரமைக்க கோரிக்கை

தொடர் மழையினால் குண்டும் குழியுமான திருவாரூர் புதிய பேருந்து நிலையம் சாலையால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2022-01-03 05:13 GMT

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. குறிப்பாக சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலைகள் பல இடங்களில் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில்,  திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News