தேனி மாவட்ட வன அலுவலர்கள் பணியிடை மாற்றம்

தேனி மாவட்ட வன அலுவலர் கௌதம், மேகமலை வன உயிரின சரணாலய காப்பாளர் துக்காராம் சச்சின் போஸ்லே ஆகியோர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-02-02 18:10 GMT

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் வன உயரின காப்பாளர்கள் ஆகியோர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை சென்னையில் உள்ள முதன்மை தலைமை பாதுகாவலர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இவற்றில் தேனி மாவட்ட வன அலுவலர் கௌதம், திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின சரணாலய காப்பளராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல கடலூர் மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் மேகமலை வன உயரின சரணாலயக்காப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கண்ட இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட குரங்கனி தீவிபத்திற்குப் பின் தேனி மாவட்டத்திற்கு பணியிடை மாறுதலாகி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News