தஞ்சாவூர் மாநகராட்சியின் முதல் திமுக மேயராக சன்.இராமநாதன் தேர்வு

Update: 2022-03-03 08:30 GMT

தஞ்சாவூர் மாநகராட்சியின் முதல் திமுக மேயர் சன்.இராமநாதன்.

நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி நகர்மன்ற சாதாரண தேர்தலில் தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில், 42 வார்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றியது. மேலும் 7 வார்டுகளை அதிமுகவும், 1 வார்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், ஒரு வார்டில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து யார் மேயர் என எதிர்பார்ப்பு தஞ்சை மக்களிடமும்! கட்சி நிர்வாகிகளிடம் அதிகரித்தது. இந்நிலையில் இன்று மேயர் பட்டியலை திமுக கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 45வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த சன்.ராமநாதன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே 3 முறை வார்டு உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எதிர்க்கட்சிகள் அனைவரும் டெபாசிட்டை இழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் உதயநிதி ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர். திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்.

Tags:    

Similar News