தஞ்சை மாவட்டத்தில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை கும்பகோணம், தஞ்சை மாநகராட்சி ஆகிய பகுதிகளில் நாளை(டிச 27) நடைபெறுகிறது

Update: 2023-12-26 15:30 GMT

பைல் படம்

பொதுமக்கள் இணையவழிவாயிலாக தற்போது பெற்றுவரும் சேவைகளை விரைவாகவும் பல்வேறுதுறைகள் மூலம்பெற்று வரும் வெவ்வேறு சேவைகளை ஒரேஇடத்திலும் பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி ”மக்களுடன் முதல்வர்”என்ற பெயரில் புதிதாக திட்டம் துவக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் அனைத்து மாநகராட்சிகள் / நகராட்சிகள் / பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதியை ஒட்டியுள்ள    ஊரகப் பகுதிகளில் தஞ்சாவூ ர் மாவட்டத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, 27.12.2023 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை மாநகராட்சியில் தஞ்சாவூர் ராமகிருஷ் ணாபுரம் விநாயகா திருமண மண்டபம் மற்றும் கும்பகோணம் ரயில்வே புதுரோடு, தாவுத் மஹாலிலும் நகராட்சியில் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் சாலை, குட்டால் திருமண மண்டபத்திலும், மாநகராட்சி பகுதியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதியான விளார் கிராம சேவை  மையம் மற்றும் பழவந்தான் கட்டளை அரசுநடுநிலைப் பள்ளியிலும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் எரிசக்தித்துறை / தமிழ்நாடு மின்சார வாரியம், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூகநலத் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் (ம) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை (மாவட்ட தொழிற் மையம்), தொழிலாளர் நல வாரியம், கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளில் கணினி மூலம் பதிவு செய்து தேவையான ஆவணங்கள் பெறுவதற்கு அதற்குரிய கட்டணம் செலுத்தி தொடர்புடைய துறைகளிடமிருந்து பெற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பாக இதனைப் பயன் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், பொது மக்களுக்கு தேவைப்படும் சேவைகளை பெறுவதற்கு அதற்குரிய ஆவணங்களை தவறாமல் முகாமிற்கு எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.பொது மக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்  தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News