தஞ்சாவூர் மாநகராட்சியில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்.

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Update: 2021-06-15 03:45 GMT

பைல் படம்

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கம், மேம்பாலம் அருகில் உள்ள இந்திய குழந்தைகள் நலசங்கம், மகர்நோம்புசாவடி ஆரம்ப சுகாதார நிலையம், கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய நான்கு இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கோவாக்ஷீன், கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை, இதனால் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தடுப்பூசி மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்தவுடன் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என ஆனையர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News