இந்து சமய சான்றோர்களிடம் கோயில்களை ஒப்படைக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்

தமிழகம் முழுவதிலும் உள்ள இந்து கோயில்களை இந்து சமய சான்றோர்கள், பக்தர்களிடமே ஒப்படைக்கக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தஞ்சையில் மே மாதம் 8 ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், ஆதினங்களும், மடாதிபதிகளும் பங்கேற்க உள்ளதாக தஞ்சையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டியளித்தார்.

Update: 2021-04-24 11:00 GMT

தஞ்சையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக அறங்காவலர்கள் கூட நியமிக்கவில்லை என்றவர்,

இஸ்லாமியர்களுக்கு வக்பு வாரியம் இருப்பதுபோல், கிறிஸ்தவர்களே அவர்கள் சர்ச்களை நிர்வாகம் செய்வது போல், இந்துக் கோயில்களை பக்தர்களே நிர்வாகம் செய்திட பக்தர்களிடம் ஒப்படைக்கக் கோரி தஞ்சையில் மே மாதம் 8 ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்,

அரசு அனுமதி தராவிட்டால் நீதிமன்ற அனுமதி பெறுவோம் என்றவர், ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசின் மேற்பார்வையிலும் நீதிமன்றத்தின் மேற்பார்வையிலும் அவசர தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்திட வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News