தஞ்சை மாவட்ட மக்கள் குறை தீர் முகாம்: பல்வேறு கோரிக்கைகளுக்காக 320 பேர் மனு

Tanjore District Peoples Grievance Redressal Camp

Update: 2022-06-28 14:15 GMT

தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்த மக்கள் குறை கேட்பு முகாமில் மனு அளித்த பொதுமக்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றபொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டஆட்சித்தலைவர்.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்றமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவசவீட்டுமனைபட்டா,முதியோர் உதவித்தொகை, குடும்பஅட்டை, பட்டாமாற்றம், கல்விகடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய320 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும்,மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார். 

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என். ஓ. சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  ஸ்ரீகாந்த் .தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்)தவவளவன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News